Sunday, December 9, 2012

ஸ்வாமி ஐயப்பன் தரிசனம்

அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய அவசரஉலகில் கடந்தகால நிகழ்வுகளை வரும் தலைமுறையினர் அறிய வாய்ப்புகளே இல்லை.
இன்றைய தலைமுறையினரே மறந்துவிட்ட பழக்கவழக்கங்களை நினைவுகளில் கொண்டுவரும் பொருட்டும் இனி வரும்காலத்தினர் அறியும் வகையில் என் பதிவுகள்.
இன்றைக்கு முப்பத்துஐந்து ஆண்டுகளுக்கு முன் புத்தக வடிவில் '' ஸ்ரீ ஐயப்பன் பூஜை முறைகள்''  என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
ஜோதிஷம் - மாயூரம் வைத்யநாதம் இதன் ஆசிரியர்.
வைத்யநாதம் ஜோதிஷ கேந்திரம் வெளியீடு.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாசியுடன் 1978-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதன் மூலபிரதி இன்று எவரிடமும் இருப்பதாக தெரியவில்லை. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் வழிகாட்டிகளில் முதன்மையான லெக்ஷ்மணன் அவர்கள் அவரின் ''குருஸ்வாமிகள்''மூலம் முப்பது ஆண்டுகளுக்கு முன் அளிக்கபட்டு பாதுகாக்கபட்டு வந்துள்ள இப்புத்தகம் DTP முறையில் தொகுக்கபட்டது.மிக சொற்பமாக வந்தஇந்த பிரதிகளில் ஒன்றே ஒன்று மட்டும் இப்பொழுது உள்ளது.

இப்புத்தகத்தின் மூலம் அறியபட்டு இன்றுவரை கடைபிடித்து வந்ததின் காரணத்தால் நான் அடைந்த நன்மைகள் ஏராளம்.

வரும்காலதலைமுறையினர் அறியும் வகையில் இப்புத்தகம் உண்மையுருவில்...

தேவை உள்ள ஆன்மீகஅன்பர்கள் இதனை பிரதி எடுத்துகொள்ளலாம்.

விரதமுறைகளும் வழிபாடுகளும் வரும் நாட்களில்...  

Sunday, August 12, 2012

ஐயப்பன் ஓர் அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் ஊரில் ஸ்வாமி ஐயப்பன் விரதம் என்றால் என்ன? அதன் பலன்கள் யாவை?
அதனை கடைபிடிப்பது எவ்வாறு? என்றும் இன்றைக்கு இந்த சிதம்பரம் நகரத்திற்கு முன்னோடியாக வழி காட்டியவர் பெரிய குருஸ்வாமி மசாலாபால் சாமி என்றழைக்கப்பட்ட பாலசுந்தரம் அவர்கள்.
  இன்று இந்த ஊரில் இருக்கும் அனைத்து ஐயப்ப குருமார்களும் அவரின் வழித்தோன்றல்களே.
 அவரின் வழியொற்றி இன்றுவரை ஆண்டுதோறும் ஐயனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவரான வையூர் குருசாமி என்றுஅழைக்கப்படும் முத்தையன் அவர்கள் எங்களின் வழிகாட்டி ஆவார்கள்.
  எங்கள் குடும்பத்திற்கு ஸ்வாமி ஐயப்பனை அறிமுகம் செய்துவைத்து இன்றுவரை நாங்கள் சபரிமலை சென்றுவரும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பெருமை இஞ்சினியர்சாமி எனும் சீணுவாசன் அவர்களையே சாரும்.
  மசாலாபால்சாமியால் துவக்கபட்டு இன்றுவரை மலைக்குசெல்லும் வாய்ப்பினை பல புதியவர்களுக்கு அளித்துவரும் தில்லைமணிமண்டபம் 
குருஸ்வாமி குழந்தைவேல் குருசாமி அவர்கள் என் வாழ்கையில் மிக முக்கியமான ஒரு பாதையை அமைத்து கொடுத்தவர்கள் என்றால் அது மிகையாகாது.

குருவும் சீடனும் வரும் நாட்களில்...

   

Saturday, August 4, 2012

ஸ்வாமி சரணம்

இன்றைக்கு முப்பதுஆண்டுகளுக்கு முன் ஒருநாள், கார்த்திகை முதல் நாள் அதிகாலைவேளை என் வாழ்கையின் வழியைமாற்றிய நாள்  ஆம் அன்றுதான் முதல்முறையாக விரதம்ஆரம்பித்தேன் சபரிமலைசெல்ல.
என்குடும்பத்தில் அனைவரும் சபரிமலைசெல்பவர்கள்தான் எனக்குமுன்பிருந்தே, நான் மூன்றாவது தலைமுறையாக விரதம் ஆரம்பிக்கின்ரேன்.
அந்த சபரிவாசன் என்குடும்பத்தில் ஒருவர் அதனால் சபரிமலை விரதகாலங்கள் என்வீட்டின் விழாகாலங்கள் ஆகும்.இப்படிபட்டவேளையில்தான் என்விரதம்ஆரம்பம் 
என் குருநாதர் என் தகப்பனார் வெங்கடகிருஷ்ணன் குருஸ்வாமி. 
இன்றுபோல்அல்ல அன்றையபக்தர்கள்.விரதமுறைகள் முறைப்படி அனுசரித்தகாலம் அது.சபரிமலைக்கு விரதம் இருந்து சென்றகாலம் அது,
மலைக்கு மணிமாலை அணிந்து செல்லும்காலம் இது. இன்றைக்கு பழைய வழிமுறைகளை தெரிந்தவர்கள் மிகவும்சொற்ப்பம்.இனி வரும் தலைமுறையினர் அறியும் பொருட்டே இதில் வரும் தகவல்கள்.
இதில்வரும் சம்பவங்கள் அனைத்தும் என்வாழ்கையின் நிகழ்வுகள். 
பகவானும் பக்தனும் வரும் நாட்களில்...





Saturday, July 28, 2012

அவரா இவர்

இன்று இவரை அறியாதவர்கள் மிகக்குறைவு, அன்று ? என் வாழ்க்கை பாதையை மாற்றிய நாள்.
ஆம்,அடுத்த நாள் இரவே நான் திருப்பதி செல்லும்
வாய்ப்பு கிடைத்தது.( அந்த நிகழ்ச்சியையும் அதன்
பின் என் வாழ்கையில் நடைபெற்ற மாற்றங்களை
தனி பதிவுகளில் காண்போம் ) யார் இவர் என்று நான் கேட்க,மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்றார்.அது எப்படிநடக்கும் அவராஇவர்என்றேன்
ஆம் அவரேதான், உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ சரியாக கேள் என்று ,கேட்கும் முறையை எனக்கு கற்றுகொடுத்தார். அன்றுதான் தெரிந்துகொண்டேன் நம் கோரிக்கைகளை ஆண்டவரிடம் கேட்பதற்கு கூட வழிமுறைகள் உள்ளன என்று.நானும் இம்முறைகளை பரிசோதித்து பார்க்கிறேன் இன்றுவரை சரியாக இருக்கிறது.அப்படியானால் ஆத்ம பரிசோதனை செய்து,ஆண்டவரிடம் பேசும் வழிதனைகாட்டிகொடுத்து,
என் வாழ்கையில் மாற்றதை ஏற்படுத்திய இவரே என் ஆத்ம குரு ஆவார்.ஆமாம் ஏற்கனவே இருந்த பக்தி முறைகளிள் இவர் என்ன மாற்றம்  செய்துவிட்டார் ? ஒன்றும்இல்லை,நாம் ஆண்டவரிடம் 
பிராத்தனை செய்யும்பொழுது ,ஒவ்வொருவரும் அவர்கள் கற்றுக்கொண்ட வழிகளில் செல்கிறோம்,அதில் கேட்பதை சரியாக கேள் என்பதுதான் இவர் உலகிற்க்கு அளித்த வழிமுறை ஆகும்.
எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்னும் பகவான் கிருஷ்ணன் உடைய உபதேசமே இவரின் வழிகாட்டுதல்.                                                        பக்தனின் அந்தரங்கஆசைகள் கூடநிறைவேற்றும் பகவான் வசம் பக்தன் அடையவேண்டியது சரணாகதி எனும் வழியை,இன்றையதலைமுறையினர் அறியும் வகையில் எளியதாக்கினார்.அதனால் பயன் அடைந்தவர்கள் பலர்.நடப்பது அனைத்தும் நாராயணன்  செயல்,வரும் நாட்களில்...                                                       

Saturday, July 21, 2012

கல்கி

வணக்கம்.
         இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்,ஒருநாள் பிற்பகல்வேளையில்,நான் தெருவில் நடந்து செல்லும்போது எனது நண்பர் (குருஜி) ஆலம்பாடி சங்கரநாராயணன் ரெட்டியார் ( செல்லமாகரெட்டிசார்) அவர்களை சந்தித்தேன்.என் வாழ்கையில் நான்பழகிய வித்யாசமான மனிதர்களில் முதல்நபர்.      (வாழ்கையை இயல்பாக எதிர்கொள்ளும் வித்தையை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்)
அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான்,மேலேஉள்ளபடத்தைகாட்டி,
இதை உண்னோடு வை.உணக்கு தேவையானதை சரியாக கேள் ? அவை கிடைக்கும் என்றார்.உடனே நான் திருப்பதி சென்று மொட்டை போடவேண்டும் என்று ஆசை இவர் எனக்கு செய்வாரா என்றேன்.நிச்சயம் நடக்கும் என்றார்.அது எப்படி நடக்கும் ? படத்தை பையிலோ,கையிலோ, வீட்டிலோ வைத்து கொண்டாள் கேட்டதுகிடைக்குமா ? ஆமாம் யார் இவர்?
எனக்கு அவர் மொட்டை அடித்தாரா ? வாருங்கள் என் வாழ்கையோடு பயணிப்போம் வரும் நாள்களில்...
 
 

Saturday, July 14, 2012

முதல் வணக்கம்


                              பிறந்தது  முதல் இப்போதுவரை வழி நடத்தும்                                                                                           அனைவருக்கும்  
       ஆம் நான் இன்று உங்கள் முன்வரும் இந்த நேரம் வரை  எனக்கு
என்றும் உற்றநண்பனாக ,வழிகாட்டியாக விளங்கும் என் குருநாதர்களுக்கு இந்த வலைப்பூ சமர்ப்பணம். 
      இப்பறந்த பிரபஞ்சத்தில் ,நானும் உங்களுடன் .அனைத்து விதமான தகவல்களுடன் அடுத்து வரும் நாட்களில்...