Sunday, August 12, 2012

ஐயப்பன் ஓர் அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் ஊரில் ஸ்வாமி ஐயப்பன் விரதம் என்றால் என்ன? அதன் பலன்கள் யாவை?
அதனை கடைபிடிப்பது எவ்வாறு? என்றும் இன்றைக்கு இந்த சிதம்பரம் நகரத்திற்கு முன்னோடியாக வழி காட்டியவர் பெரிய குருஸ்வாமி மசாலாபால் சாமி என்றழைக்கப்பட்ட பாலசுந்தரம் அவர்கள்.
  இன்று இந்த ஊரில் இருக்கும் அனைத்து ஐயப்ப குருமார்களும் அவரின் வழித்தோன்றல்களே.
 அவரின் வழியொற்றி இன்றுவரை ஆண்டுதோறும் ஐயனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவரான வையூர் குருசாமி என்றுஅழைக்கப்படும் முத்தையன் அவர்கள் எங்களின் வழிகாட்டி ஆவார்கள்.
  எங்கள் குடும்பத்திற்கு ஸ்வாமி ஐயப்பனை அறிமுகம் செய்துவைத்து இன்றுவரை நாங்கள் சபரிமலை சென்றுவரும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பெருமை இஞ்சினியர்சாமி எனும் சீணுவாசன் அவர்களையே சாரும்.
  மசாலாபால்சாமியால் துவக்கபட்டு இன்றுவரை மலைக்குசெல்லும் வாய்ப்பினை பல புதியவர்களுக்கு அளித்துவரும் தில்லைமணிமண்டபம் 
குருஸ்வாமி குழந்தைவேல் குருசாமி அவர்கள் என் வாழ்கையில் மிக முக்கியமான ஒரு பாதையை அமைத்து கொடுத்தவர்கள் என்றால் அது மிகையாகாது.

குருவும் சீடனும் வரும் நாட்களில்...

   

Saturday, August 4, 2012

ஸ்வாமி சரணம்

இன்றைக்கு முப்பதுஆண்டுகளுக்கு முன் ஒருநாள், கார்த்திகை முதல் நாள் அதிகாலைவேளை என் வாழ்கையின் வழியைமாற்றிய நாள்  ஆம் அன்றுதான் முதல்முறையாக விரதம்ஆரம்பித்தேன் சபரிமலைசெல்ல.
என்குடும்பத்தில் அனைவரும் சபரிமலைசெல்பவர்கள்தான் எனக்குமுன்பிருந்தே, நான் மூன்றாவது தலைமுறையாக விரதம் ஆரம்பிக்கின்ரேன்.
அந்த சபரிவாசன் என்குடும்பத்தில் ஒருவர் அதனால் சபரிமலை விரதகாலங்கள் என்வீட்டின் விழாகாலங்கள் ஆகும்.இப்படிபட்டவேளையில்தான் என்விரதம்ஆரம்பம் 
என் குருநாதர் என் தகப்பனார் வெங்கடகிருஷ்ணன் குருஸ்வாமி. 
இன்றுபோல்அல்ல அன்றையபக்தர்கள்.விரதமுறைகள் முறைப்படி அனுசரித்தகாலம் அது.சபரிமலைக்கு விரதம் இருந்து சென்றகாலம் அது,
மலைக்கு மணிமாலை அணிந்து செல்லும்காலம் இது. இன்றைக்கு பழைய வழிமுறைகளை தெரிந்தவர்கள் மிகவும்சொற்ப்பம்.இனி வரும் தலைமுறையினர் அறியும் பொருட்டே இதில் வரும் தகவல்கள்.
இதில்வரும் சம்பவங்கள் அனைத்தும் என்வாழ்கையின் நிகழ்வுகள். 
பகவானும் பக்தனும் வரும் நாட்களில்...