Saturday, July 28, 2012

அவரா இவர்

இன்று இவரை அறியாதவர்கள் மிகக்குறைவு, அன்று ? என் வாழ்க்கை பாதையை மாற்றிய நாள்.
ஆம்,அடுத்த நாள் இரவே நான் திருப்பதி செல்லும்
வாய்ப்பு கிடைத்தது.( அந்த நிகழ்ச்சியையும் அதன்
பின் என் வாழ்கையில் நடைபெற்ற மாற்றங்களை
தனி பதிவுகளில் காண்போம் ) யார் இவர் என்று நான் கேட்க,மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்றார்.அது எப்படிநடக்கும் அவராஇவர்என்றேன்
ஆம் அவரேதான், உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ சரியாக கேள் என்று ,கேட்கும் முறையை எனக்கு கற்றுகொடுத்தார். அன்றுதான் தெரிந்துகொண்டேன் நம் கோரிக்கைகளை ஆண்டவரிடம் கேட்பதற்கு கூட வழிமுறைகள் உள்ளன என்று.நானும் இம்முறைகளை பரிசோதித்து பார்க்கிறேன் இன்றுவரை சரியாக இருக்கிறது.அப்படியானால் ஆத்ம பரிசோதனை செய்து,ஆண்டவரிடம் பேசும் வழிதனைகாட்டிகொடுத்து,
என் வாழ்கையில் மாற்றதை ஏற்படுத்திய இவரே என் ஆத்ம குரு ஆவார்.ஆமாம் ஏற்கனவே இருந்த பக்தி முறைகளிள் இவர் என்ன மாற்றம்  செய்துவிட்டார் ? ஒன்றும்இல்லை,நாம் ஆண்டவரிடம் 
பிராத்தனை செய்யும்பொழுது ,ஒவ்வொருவரும் அவர்கள் கற்றுக்கொண்ட வழிகளில் செல்கிறோம்,அதில் கேட்பதை சரியாக கேள் என்பதுதான் இவர் உலகிற்க்கு அளித்த வழிமுறை ஆகும்.
எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்னும் பகவான் கிருஷ்ணன் உடைய உபதேசமே இவரின் வழிகாட்டுதல்.                                                        பக்தனின் அந்தரங்கஆசைகள் கூடநிறைவேற்றும் பகவான் வசம் பக்தன் அடையவேண்டியது சரணாகதி எனும் வழியை,இன்றையதலைமுறையினர் அறியும் வகையில் எளியதாக்கினார்.அதனால் பயன் அடைந்தவர்கள் பலர்.நடப்பது அனைத்தும் நாராயணன்  செயல்,வரும் நாட்களில்...                                                       

No comments:

Post a Comment

நீங்க நினைக்கறத சொல்லுங்க !