Sunday, December 9, 2012

ஸ்வாமி ஐயப்பன் தரிசனம்

அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய அவசரஉலகில் கடந்தகால நிகழ்வுகளை வரும் தலைமுறையினர் அறிய வாய்ப்புகளே இல்லை.
இன்றைய தலைமுறையினரே மறந்துவிட்ட பழக்கவழக்கங்களை நினைவுகளில் கொண்டுவரும் பொருட்டும் இனி வரும்காலத்தினர் அறியும் வகையில் என் பதிவுகள்.
இன்றைக்கு முப்பத்துஐந்து ஆண்டுகளுக்கு முன் புத்தக வடிவில் '' ஸ்ரீ ஐயப்பன் பூஜை முறைகள்''  என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
ஜோதிஷம் - மாயூரம் வைத்யநாதம் இதன் ஆசிரியர்.
வைத்யநாதம் ஜோதிஷ கேந்திரம் வெளியீடு.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாசியுடன் 1978-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதன் மூலபிரதி இன்று எவரிடமும் இருப்பதாக தெரியவில்லை. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் வழிகாட்டிகளில் முதன்மையான லெக்ஷ்மணன் அவர்கள் அவரின் ''குருஸ்வாமிகள்''மூலம் முப்பது ஆண்டுகளுக்கு முன் அளிக்கபட்டு பாதுகாக்கபட்டு வந்துள்ள இப்புத்தகம் DTP முறையில் தொகுக்கபட்டது.மிக சொற்பமாக வந்தஇந்த பிரதிகளில் ஒன்றே ஒன்று மட்டும் இப்பொழுது உள்ளது.

இப்புத்தகத்தின் மூலம் அறியபட்டு இன்றுவரை கடைபிடித்து வந்ததின் காரணத்தால் நான் அடைந்த நன்மைகள் ஏராளம்.

வரும்காலதலைமுறையினர் அறியும் வகையில் இப்புத்தகம் உண்மையுருவில்...

தேவை உள்ள ஆன்மீகஅன்பர்கள் இதனை பிரதி எடுத்துகொள்ளலாம்.

விரதமுறைகளும் வழிபாடுகளும் வரும் நாட்களில்...  

No comments:

Post a Comment

நீங்க நினைக்கறத சொல்லுங்க !